சென்னை: வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை வட்டார அளவில் வாடகைக்கு வழங்கும் மையங்கள் அமைக்க தமிழக அரசு 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் ஆயிரத்து 510 வட்டார அளவிலான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், நடப்பு நிதியாண்டில், 304 மையங்கள் அமைப்பதற்கு 30 கோடியே 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.