புதுச்சேரி: ஹிட்லரின் தங்கை போல் கிரண்பேடி இருப்பதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டியுள்ளார். புதுச்சேரியில் விதிகளை மீறி நடக்கும் அதிகாரத்தில் உள்ளவர்கள் விரைவில் சிறை செல்வர் என நாராயணசாமி கூறினார். முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பேட்டியளித்துள்ளார்.