×

பண்ருட்டி செட்டிப்பட்டறை ஏரியில் குடியிருப்போருக்கு 2 ஆண்டாக மாற்று இடம் வழங்காமல் அலைக்கழிக்கும் அரசு அதிகாரிகள்

பண்ருட்டி: பண்ருட்டி செட்டிப்பட்டறை ஏரியில் 300க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 2ஆண்டுகளுக்கு முன்பு நீதிமன்றம் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமப்பை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது. இதன்பேரில் வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் முன்னிலையில் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள அனைத்து வீடுகளும் ஜேசிபி மூலம் இடிக்கப்பட்டது. இதனால் இப்பகுதி மக்கள் மாற்று இடம் வேண்டி மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் வருவாய் துறையினரிடம் மனு அளித்தனர். ஆனால் 2ஆண்டுகள் கடந்தும் இதுவரை மாற்று இடம் வழங்கப்படவில்லை. இதுகுறித்த இப்பகுதி மக்கள் கூறுகையில் பண்ருட்டி- லிங் ரோடு விரிவுப்படுத்துவதற் காகவும், அரசு மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்காகவும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு லிங் ரோட்டில் வசித்த வந்த 300க்கு மேற்பட்ட குடும்பங்களை வருவாய் துறையினர் மற்றும் நகராட்சியினர் அப்புறப்படுத்தி மாற்று இடமாக  செட்டிபட்டறை ஏரியில் குடி அமர்த்தினர். அதன் பிறகு அனைத்து அடிப்படை வசதிகளையும் அமைத்து கொடுத்தனர். இதனை தொடர்ந்து கடந்த 35 ஆண்டுகளாக செட்டிபட்டறை ஏரியில் வசித்து வந்தோம்.

இந்நிலையில் நீதிமன்றம் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமைப்பை அகற்ற வேண்டும் என உத்திரவிட்டது. ஆனால் இதுவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாற்று இடம் சம்பந்தமாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் வேறு வழியின்றி இடிக்கப்பட்ட இடத்திலேயே கூடாரம் அமைத்து வசித்து வருகின்றனர். இப்பகுதியில் குடிநீர் வசதியின்மை, மின்வசதி இல்லாமை ஆகிய பிரச்சனைகளால் கடந்த 2 ஆண்டு களாக சிரமப்படுகிறோம். மேலும் குழந்தைகளை சரியான நேரத்தில் பள்ளிக்கு அனுப்ப முடிய வில்லை, உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களை கவனிக்க முடியவில்லை. மேலும் மழைக் காலம் தொடங்கி விட்டது. கடந்த சில நாட்களாக மழை பெய்து கொண்டிருக் கிறது. இதனால் குழந்தைகள் மற்றும் முதியோர்கள் பாதிக்கப்படுகிறார்கள். வெயில் நேரத்திலும் பாதிப்பு ஏற்படுகிறது. நாங்கள் தங்குவதற்கு இடம் இல்லாமல் திறந்த வெளியில் வசிக்கிறோம். இதனால் கொசு தொல்லையால் அவதிப்படுகிறோம். இதனால் தொற்று நோய்  பரவ வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக மாற்று இடம் ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags : Government officials ,residents ,Chettipattara Lake ,lake ,Chettipattara , Panruti, place, government officials
× RELATED 3 அரசு உயரதிகாரிகள் மீது லஞ்ச வழக்கு