×

இலங்கை கடற்படை மீண்டும் அட்டகாசம் வலைகளை சேதப்படுத்தி மீனவர்கள் விரட்டியடிப்பு

ராமேஸ்வரம்: மீனவர்களின் படகில் இருந்த வலைகளை வெட்டி கடலில் வீசிய இலங்கை கடற்படையினர், அவர்களை மீன்பிடிக்க விடாமல் தடுத்து விரட்டிய சம்பவம் ராமேஸ்வரம் பகுதியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இலங்கை அதிபர் தேர்தலை முன்னிட்டு பாக். ஜலசந்தி கடல் இந்திய - இலங்கை கடல் எல்லைப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் இலங்கை கடற்படை கப்பல்கள் சில நாட்களாக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன. நேற்று  முன்தினம் காலையில் இலங்கையில் வாக்குப்பதிவு துவங்கியது. அன்று காலை, ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

அன்று மாலை திடீரென அங்கு வந்த இலங்கை கடற்படையினர், ராமேஸ்வரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தியதுடன், படகில் இருந்த மீன்பிடி வலைகளை வெட்டி கடலில் வீசினர். இதனை பார்த்த மற்ற மீனவர்கள்  தங்களது படகுகளை அவசரமாக திருப்பிக்கொண்டு அங்கிருந்து தப்பி வேறு பகுதிகளுக்கு சென்றனர்.அப்பகுதியில் மீன்பிடித்த அனைத்து படகுகளையும் மீன்பிடிக்க விடாமல் தடுத்த கடற்படையினர் அவர்களை மிரட்டி விரட்டியடித்தனர். இதனால், வெவ்வேறு பகுதிகளில் மீன்பிடித்து நேற்று காலை ராமேஸ்வரம் திரும்பிய மீனவர்களின்  படகுகளில் திருப்திகரமான அளவுக்கு மீன்வரத்து இல்லை. இலங்கை கடற்படையினர் மீனவர்களை விரட்டியடித்த சம்பவம் ராமேஸ்வரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Tags : Sri Lanka Navy ,fishermen ,chase ,Sri Lanka Navy Fishermen , Sri Lanka, Navy reunites, ,damaging nets
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக...