×

ஓடும் காரில் திடீர் தீவிபத்து

தாம்பரம்: சென்னை, செவன் ஹில்ஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் மணி (30). இவர் நேற்று மாலை குடும்பத்துடன் கண்டிகையில் உள்ள சிவன் கோயிலுக்கு, தாம்பரம் - மதுரவாயில் பைபாஸ் சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார். தாம்பரம் லட்சுமிபுரம் மேம்பாலம் அருகே சென்றபோது திடீரென காரின் முன் பக்கத்திலிருந்து புகை வந்தது.

இதனால், காரை சாலையோரம் நிறுத்திவிட்டு, அனைவரும் கீழே இறங்கினர். சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் கார் முற்றிலும் எரிந்து நாசமானது.


Tags : fire ,Tambaram , Tambaram, running car, sudden fire
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா