×

மயக்க சாக்லெட் கொடுத்து பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த கள்ளக்காதலன் நண்பருடன் கைது

சென்னை: மயக்க சாக்லெட் கொடுத்து, நண்பரின் மனைவியை கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில் தேடப்பட்ட கள்ளக்காதலன் நண்பருடன் கைது செய்தனர்.சென்னை விருகம்பாக்கம் காந்தி நகரை சேர்ந்த 26 வயது பெண்ணின் கணவன் தச்சு வேலை செய்து வருகிறார். இவரின் முதல் மனைவி இறந்ததால் 2வதாக இளம் அந்த இளம்பெண்ணை திருமணம் செய்துள்ளார். தச்சு வேலை காரணமாக  கடந்த ஜூலை மாதம் வெளியூர் சென்று இருந்தார். அந்த சமயத்தில், பெண்ணின் கள்ளக்காதலன் வினோத்குமார்(எ) ஹரீஷ்குமார்(30) செலவுக்கு பணம் இல்லாதால் அவரிடம் இருந்து 3 சவரன் செயினை வாங்கியுள்ளார். இதன்பிறகு திருப்பி  கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார்.

இதனிடையே சாமி பிரசாதம் என்று கூறி கேசரியுடன் சாக்லெட் கலந்துகொடுத்து கூட்டு பலாத்காரம் செய்து ஏமாற்றியது தெரியவந்தது. இதுகுறித்து பெண்ணின் கணவன், விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன்படி  போலீசார் விசாரணை நடத்தி வினோத்குமார்(எ)ஹரீஷ்குமாரை பிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ‘’தனது காதலியிடம் 3 சவரன் நகையை வாங்கியது தெரியவந்தது. அத்துடன் மயக்க சாக்லெட் கொடுத்து நண்பர்  சதீஷ்குமாருடன் சேர்ந்து நிர்வாணமாக வீடியோ எடுத்து கூட்டு பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து இவ்வழக்கு வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளக்காதலன் ஹரீஷ்குமார் மற்றும் சதீஷ்குமாரை செல்போன் சிக்னல் உதவியுடன் தேடி வந்தனர். இந்த நிலையில் ஹரீஷ்குமார், சதீஷ்குமாரை ஆகியோரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.

Tags : candy ,chocolate, Woman arrested ,gang raping, woman
× RELATED ஒரு தலைக்காதல் வழக்கு; மாணவியை...