×

வணிகர்கள், மக்களுக்கு எதிராக செயல்படும் சமூக விரோதிகள் மீது உடனடி நடவடிக்கை: போலீஸ் கமிஷனரை சந்தித்து விக்கிரமராஜா மனு

சென்னை:தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கமிஷன் ஏ.கே.விஸ்வநாதனை நேற்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது சென்னை  மண்டலத்தலைவர் கே.ஜோதிலிங்கம், மாநில கூடுதல் செயலாளர் வி.பி.மணி, மாநில செய்தி தொடர்பாளர் பி.பாண்டியராஜன், மாநில இணைச்செயலாளர் ஒய்.எட்வர்ட், மத்தியசென்னை மாவட்டத் தலைவர் எஸ்.சாமுவேல், மாவட்ட  இணைச்செயலாளர் ஏ.மாரியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

அப்போது சென்னை தி.நகரில் தங்கநகைக்கடை அதிபரை மிரட்டி பணம் பறித்த 9 பேர் கொண்ட கும்பலை மீது உடனடி நடவடிக்கை எடுத்ததற்காக கமிஷனர்,  காவல்துறை அதிகாரிகளுக்கு நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து கொள்கிறோம்.
சந்திப்பின் போது விக்கிரமராஜா மனு ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: சென்னை நகரில் உள்ள முக்கிய வணிக நிறுவனங்களையும், வணிகர்களையும் குறிவைத்து பிரஸ், மீடியா, பத்திரிகையாளர்கள், வக்கீல்கள், மனிதஉரிமை துறை நிர்வாகிகள் என்று போலியாக அடையாள அட்டை வைத்துக்கொண்டும், தங்கள்  வாகனங்களில் அதற்குரிய ஸ்டிக்கர்களை ஒட்டிக்கொண்டு கும்பலாக சென்று மிரட்டுவதும், பணம் பறித்து வருவதும் தொடர் கதையாக உள்ளது.

வாகனங்களில் இதுபோன்ற அடையாள சின்னங்களை வரைந்து கொண்டு வலம் வருவது,  பொதுமக்களிடம் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துவதுடன், காவல் துறை பணியிலும் இவர்கள் இடையூறு ஏற்படுத்துவதை பல இடங்களில் காணலாம். பல ஆண்டுகளாக இது போன்றவர்கள் கடைகளை காலி செய்ய செய்வது, வீடுகளை காலி  செய்யச் செய்வது, கட்டப் பஞ்சாயத்து செய்வது, ஆயுதங்களை காட்டி மிரட்டுவது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே, இத்தருணத்தைப் பயன்படுத்தி பொதுமக்களுக்கும், வணிகர்களுக்கு எதிராக செயல்படும்  இதுபோன்ற சமூக விரோதிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, வணிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

Tags : Vikramarajah ,police commissioner , Vikramarajah's petition to meet police commissioner
× RELATED தேர்தல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய...