×

தேமுதிக சார்பில் உள்ளாட்சி தேர்தலுக்கு 32 மாவட்டங்களுக்கு பொறுப்பாளர் நியமனம் : விஜயகாந்த் அறிவிப்பு

சென்னை: உள்ளாட்சி தேர்தலுக்காக தேமுதிகவில் 32 மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர் களிடம்  தேமுதிக சார்பில் அந்தந்த மாவட்ட அலுவலகங்களில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. மேலும் அதிமுகவுடன் உள்ளாட்சி அமைப்பு தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாவட்டங்கள் தோறும் உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளர்களை தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று அறிவித்தார்.

அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு தேமுதிக கேப்டன் மன்ற செயலாளர் செல்வ.அன்புராஜ், சென்னை- மகளிர் அணி துணை செயலாளர் சுபமங்களம் டில்லிபாபு, திருவள்ளூர்- தேமுதிக தொழிற்சங்க பேரவை செயலாளர் ஜி.காளிராஜன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதே போல 32 மாவட்டங்களுக்கும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். உள்ளாட்சி தேர்தலுக்கு மாவட்ட வாரியாக நியமிக்கப்பட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் 18ம் தேதி(நாளை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொள்ளவேண்டும் என்று விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

Tags : Vijayakanth ,districts ,government ,elections , Appointment of 32 districts, responsible, local government elections
× RELATED விஜயகாந்த் நினைவிடத்திற்கு போலீஸ்...