×

ரஜினி சொல்வது சரியல்ல தமிழகத்தில் வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பிவிட்டார் : வைகோ பேட்டி

சென்னை: ரஜினி சொல்வது சரியல்ல. தமிழகத்தில் வெற்றிடத்தை மு.க.ஸ்டாலின் நிரப்பிவிட்டார் என்று வைகோ கூறினார். சென்னை விமான நிலையத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மேகதாது பிரச்னை, ஹைட்ரோகார்பன் திட்டம் போன்றவை தலைக்குமேல் கத்தியாக தொங்கிக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது இந்த பிரச்னையும் சேர்ந்து இருப்பதால் தமிழகமே பாலைவனமாக மாறிவிடுமோ என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதை தான்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டுகிறார். ஆனால் அதற்கு பதில் சொல்ல இந்த அரசு வக்கற்று திமுக உள்ளாட்சி தேர்தலை நிறுத்துவதற்கு முயற்சிக்கின்றனர் என்ற தவறான குற்றச்சாட்டை கூறுகின்றனர்.

உள்ளாட்சி தேர்தலை நிறுத்துவதற்கான செயலை ஆளுங்கட்சியான அதிமுக செய்யுமே தவிர திமுக செய்யாது. அது தற்போது விருப்ப மனுவை வாங்கிவிட்டது. மொத்தத்தில் தமிழகத்திற்கு இது போதாத காலம். தமிழகத்தில் வெற்றிடம் என்று ரஜினி கூறுவது சரியல்ல. வெற்றிடம் என்பதே அறிவியல் பூர்வமாக கிடையாது. வெற்றிடத்தை காற்று நிரப்பிவிடும். அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டிருந்தாலோ அதை திமுக தலைவர் ஸ்டாலின் நிரப்பிவிட்டார். எனவே தமிழகத்தில் வெற்றிடம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. அதேபோல்தான் கருணாநிதி மறைவுக்கு பின்பு ஏற்பட்ட வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பிவிட்டார்  என்றார்.

Tags : Tamil Nadu ,interview ,Stalin ,Vaiko , Stalin has filled , void in Tamil Nadu
× RELATED தென்காசியில் திமுக வேட்பாளர் ராணி...