×

ஆட்டோவில் சவாரி சென்றபோது தம்பதி தவறவிட்ட 15 சவரன் பணம் போலீசில் ஒப்படைப்பு

சென்னை: ஆட்டோவில் சவாரி சென்றபோது தம்பதி தவறவிட்ட 15 சவரன் நகை, பணம் ேபாலீசில் ஒப்படைக்கப்பட்டது. அந்த பயணிகள் யார் என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கொடுங்கையூர், முத்தமிழ் நகரை சேர்ந்தவர் முரளி (56), சொந்தமாக ஆட்டோ வைத்துள்ளார். இந்நிலையில், நேற்று எழும்பூர் பழைய கமிஷனர் அலுவலகம் அருகே ஒருவர், குடிபோதையில் தனது மனைவியுடன் ஆட்டோவில் ஏறி சண்டை போட்டுக் கொண்டே வந்துள்ளார்.

அப்போது, கோபத்தில் திடீரென்று ஆட்டோவில் இருந்து இறங்கி சென்றுவிட்டார். இதையடுத்து அவர் மனைவியும் அவர் பின்னால் இறங்கி விட்டார். அவர்கள் இறங்கி சென்ற பிறகு ஆட்டோ சீட்டில் ஒரு பை இருப்பதை கண்ட டிரைவர் அதை எடுத்து பார்த்துள்ளார். அதில் 15 சவரன் மதிப்பில் மணி வைத்த டாலர், கல் வைத்த நெக்லஸ், காசு மாலை, வளையல், டாலர் செயின், சிறிய காசுமாலை மற்றும் பணம் 9,500 ஆகிய இருப்பதை கண்டார்.
பின்னர் ஆட்டோவில் இருந்து இறங்கி சென்ற நபர்களை அந்த பகுதியில் தேடி பார்த்துள்ளார். ஆனால், அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து நடந்த சம்பவம் பற்றி கூறி நகைகள் மற்றும் பணத்ைத எழும்பூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். அவரை போலீசார் பாராட்டினர். 


Tags : auto ride , couple lost, 15 shavings , auto ride
× RELATED பெனலி பைக்குகள்