மதுரை: கிரானைட் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி மதுரை பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனம் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பி.ஆர்.பி. நிறுவனத்தின் மனுவை ஏற்கனவே உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டதால் தள்ளுபடி செய்வதாக மதுரை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனம் மணல் குவாரி முறைகேடுகளில் ஈடுபட்டு ரூபாய் 4,121 கோடி அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.