×

பல்லாவரம் அருகே பரபரப்பு மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் 2 பேர் சிக்கினர்: கியூ பிரிவு போலீசார் விசாரணை

சென்னை: சமீபத்தில் பல்லாவரம் அடுத்த பம்மல், தொல்காப்பியன் நகரில் தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் இம்மானுவேல் ஜெயசீலன் என்பவரது  வீட்டில் 117 சவரன் நகைகள் மற்றும் 30 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் கொள்ளை போனது. இந்த கொள்ளை வழக்கில் சங்கர் நகர்  போலீசாரால், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த கொள்ளையன் ஜான் போஸ்கோவை கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அவன் கொள்ளை சம்பவம் குறித்து கூறியதுடன், மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் சிலர் பம்மல் பகுதியில் தங்கியிருப்பதாக கூடுதல் தகவல் கூறினான்.

அவன் கொடுத்த ரகசிய தகவலின் அடிப்படையில், திருவள்ளூரை சேர்ந்த மாவோயிஸ்ட் தசரதன் என்பவருடன்  தொடர்பில் உள்ளதாக கூறப்படும், மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் சிலர் பம்மல் பகுதியில் தங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட சங்கர் நகர் போலீசார், பம்மல், மோசஸ் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்த அப்பு (எ) நரேந்திரன் (32), பார்த்திபன் (26) ஆகியோரை சந்தேகத்தின் பேரில்  கைது செய்து சங்கர் நகர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி பின்னர் அவர்களை  கியூ பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். கியூ பிரிவு போலீசார் விசாரித்தனர்.

Tags : supporters ,Maoist ,Pallavaram Two ,CW ,Pallavaram , Pallavaram, Maoist, Kew division police
× RELATED நெல்லை பாஜக வேட்பாளர் நயினார்...