மும்பை:
மகாராஷ்டிராவின் கல்வான் கிராமத்தில், 300 அடி ஆழ போர்வெல்லில் 6 வயது
சிறுவன் நேற்று தவறி விழுந்தான்.இதுகுறித்து போலீசாருக்கு தகவல்
தெரிவிக்கப்பட்டது. போலீசார், தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினருக்கு தகவல்
அழைத்து அவர்களுடன் சம்பவ இடத்துக்கு வந்தனர். அங்கு சிறுவனை மீட்கும்
நடவடிக்கையில் மும்முரமாக நடந்தது.கடும் போராட்டத்திற்குப் பிறகு
போர்வெல்லில் தவறி விழுந்த சிறுவனை தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர்
பத்திரமாக மீட்டனர்.