×

தென்பெண்ணை ஆறு விவகாரத்துக்கு தீர்வு

சென்னை: த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணைக்கட்ட தடையில்லை என்று கூறி தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.இதனால் தென்பெண்ணை ஆற்று நீரை நம்பியுள்ள கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்ட விவசாயிகளும், பொதுமக்களும் ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள். இது தமிழக மக்களின் நலன் பாதிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.
எனவே, தமிழக அரசு இப்பிரச்னையில் கர்நாடக அரசிடமும் நமது மாநிலத்திற்கான தண்ணீர் பிரச்னையையும் முன்வைத்து சுமுகத் தீர்வு காணவும் முயற்சிக்க வேண்டும் என்றார்.


Tags : Solution , six ,coconut oil
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...