×

பள்ளி முடிந்து காட்டு வழியாக திரும்பிய சிறுமியை பலாத்காரம் செய்த கொடூர வாலிபர்கள்: தூக்கில் போட கிராம மக்கள் ஆவேசம்

ஓமலூர்: , ஓமலூர் அருகே திண்டமங்கலம் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 250 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.பள்ளக்காட்டூர் பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி, 2ம் வகுப்பு படித்து வருகிறாள். நேற்று முன்தினம்  பள்ளி முடிந்து மாலையில் காட்டுப்பகுதி வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தாள். அங்குள்ள புதரில், 3 இளைஞர்கள் மது அருந்திக் கொண்டிருந்துள்ளனர். அங்கிருந்த தண்டவாளத்தை கடக்க உதவி செய்வதாக கூறி, சிறுமியை அவர்கள்  தூக்கிச் சென்றனர்.
 கீழே இறக்கி விடுமாறு அழுதும் விடவில்லை. போதை தலைக்கேறியிருந்த மூவரும், சிறுமியை புதர் மறைவுக்கு தூக்கிச் சென்று கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.

பின்னர், இதுபற்றி யாரிடமும் கூறக்கூடாது என மிரட்டி, அனுப்பி விட்டனர்.  அழுதபடியே சிறுமி தனது வீட்டிற்கு சென்றாள். ஆடையில் ரத்தம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக தொளசம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கிருந்த மருத்துவர்  விசாரித்தபோது, 3 பேர் தன்னை பலாத்காரம் செய்தது குறித்து சிறுமி, தெரிவித்தாள். இந்த புகாரின்படி தொளசம்பட்டி போலீசார், 3 வாலிபர்களையும் தேடி வருகின்றனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘சிறுமியை வன்கொடுமை செய்தவர்களை பிடித்து, தூக்கில் போடவேண்டும்’ என்றனர்.



Tags : school ,forest , forest ,school, Raped,little girl,villagers
× RELATED சேம்பார் பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி