டெல்லி : ரஃபேல் போர் விமான ஊழல் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு விரிவான விசாரணைக்கு வழிவகுத்துள்ளது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பிரான்சில் இருந்து போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்ததில் ஊழல் பற்றி உடனே விசாரிக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.