×

2 வயது குழந்தை கூட செல்போன் பயன்படுத்துவது வேதனை அளிக்கிறது; இது மோசமான காலம் : அமைச்சர் பாஸ்கரன்

சிவகங்கை : நடிகர்கள் அரசியலுக்கு வருவது பற்றி நான் பொதுவாக கூறினேன்; யாரையும் தவறாக குறிப்பிட்டு சொல்லவில்லை என்று கதர் மற்றும் கிராமத்தொழில்கள் வாரிய அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய அவர், இரண்டு வயது குழந்தை கூட செல்போன் பயன்படுத்துவது வேதனை அளிக்கிறது; இது மோசமான காலம் என்றும் பிள்ளைகளுக்கு செல்போன் வாங்கித்தரும் பெற்றோர் நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும் என்றும் கூறினார். மேலும் அவர் பேசியதாவது, வசதியான வீட்டு பிள்ளைகள் படித்து பெரியவர் ஆனதும் குடிகாரர்களாக மாறிவிடுகின்றனர். வெளியூருக்கு வேலைக்கு செல்லும் இளைஞர்கள் கடனாளியாகின்றனர்.ஆண் பிள்ளைகள் படிப்பில் கவனம் செலுத்துவதில்லை; பெண் பிள்ளைகள் மட்டுமே படிப்பில் கவனம் செலுத்துகின்றனர் என்று கூறினார்.


Tags : Baskaran , Actors, Minister, Baskaran, Sivaganga, Children
× RELATED தஞ்சாவூர் அருகே வடுகக்குடி வாழை...