மதுரை : கேரளாவில் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்க அவரது மனைவி, சகோதரிக்கு 3 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. மனைவி கலா, சகோதரி சந்திரா இருவருக்கும் நவம்பர் 17ம் தேதி வரை பரோல் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் 29ம் தேதி கேரளாவின் அகலி வனப்பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் மாவோயிஸ்ட் மணிவாசகம் உயிரிழந்தார்.