×

தகாத வார்த்தையால் எஸ்எஸ்ஐயை திட்டியதாக பாஜ பிரமுகர் கைது

மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த திருவெண்காடு பகுதியை சேர்ந்தவர் அகோரம்(40). சமீபத்தில் பாமகவிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார். ஏற்கனவே பாமகவில் இருந்தபோது செம்பனார்கோவில் பாமக பிரமுகர்  மூர்த்தி கொலை வழக்கில் அகோரம் கைது செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் மயிலாடுதுறை எஸ்.எஸ்.ஐ. ராமமூர்த்தி சாட்சி சொன்னதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 31ம் தேதி மயிலாடுதுறையில் நடந்த பாஜக கூட்டத்தில்  பேசிய அகோரம், எஸ்.எஸ்.ஐ. ராமமூர்த்தியை தகாத வார்த்தைகளால் திட்டி பேசியதாக கூறப்படுகிறது. அகோரத்தின் பேச்சு சமூகவலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து, ராமமூர்த்தி மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.  அதன்பேரில் அரசு ஊழியரை மிரட்டுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிந்து அகோரத்தை நேற்று கைது செய்தனர்.


Tags : BJP , BJP leader ,arrested
× RELATED பாஜக அரசின் கையாலாகாத தன்மை : ப.சிதம்பரம் தாக்கு