×

கடைக்காரர் மனைவியிடம் நூதன முறையில் மொபட் திருட்டு

ஆலந்தூர்: வேளச்சேரி நேரு நகரில்  தள்ளுவண்டியில் உணவு கடை நடத்தி வருபவர் கார்த்திகேயன் (45). நேற்று மதியம் 45 வயது மதிக்கத்தக்க நபர் கார்த்திகேயனிடம், “வேளச்சேரி வனத்துறையில் உள்ளவர்களுக்கு தினந்தோறும் 30 சாப்பாடு வேண்டும். ஆர்டர் எடுக்க  வனத்துறை அதிகாரியிடம் வந்து பேசுங்கள்” என்று கூறியுள்ளார். இதை நம்பிய கார்த்திகேயன் தனது மனைவி மகாலட்சுமியிடம் மொபட்டை கொடுத்து அனுப்பியுள்ளார்.

வனத்துறை அலுவலக வாசல் அருகே வந்தவுடன், அந்த ஆசாமி மகாலட்சுமியிடன் தண்ணீர் கேன் வாங்கி வருவதாக கூறி  மொபட்டை வாங்கி சென்றுள்ளார். பல மணி நேரம் ஆகியும் அந்த நபர்  வராததால் தான் ஏமாற்றப்பட்டது குறித்து மகாலட்சுமி கணவரிடம் கூறியுள்ளார். கார்த்திகேயன் கிண்டி காவல் நிலைத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த நபரை தேடி வருகின்றனர்.

Tags : theft ,Moppet , Moppet, theft,shopkeeper's, wife
× RELATED தமிழகத்தில் இரண்டு நாளில் சிலை கடத்திய 11 பேர் கைது