×

அரசு கண்டுகொள்ளவில்லை!: சென்னையில் அறிவிப்பு பலகையில் மீண்டும் பெரியார் ஈ.வெ.ரா. சாலை என ஸ்டிக்கர் ஒட்டிய த.பெ.தி.க.வினர்..!!

சென்னை: சென்னையில் பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை பெயர்மாற்றம் செய்யப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், பலகையில் மீண்டும் பெரியார் பெயரில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. அரசு நடவடிக்கை எடுக்காத நிலையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இந்த ஸ்டிக்கரை ஒட்டியுள்ளனர். சென்னையில் சில நாட்களுக்கு முன்னர் பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையை கிராண்ட் வெஸ்டர்ன் நெடுஞ்சாலை என மாற்றி அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு அரசியல் கட்சி தலைவர்கள், பெரியாரிய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதனிடையே அண்ணா, காமராஜர் சாலைகளும் பெயர் மாற்றம் செய்யப்பட்டன. பெரியார் பெயர்மாற்றத்தை கண்டித்து திராவிடர் விடுதலை கழகத்தினர் அறிவிப்பு பலகையில் கருப்பு மை ஊற்றி எதிர்ப்பை பதிவு செய்தனர். சாலைகளை பெயர் மாற்றம் செய்யும் முடிவை நிறுத்திவைக்கக் கோரி தலைமை செயலாளரிடம் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சராகவும் இருக்கும் முதலமைச்சர் பழனிசாமி, இதுவரை எந்த விளக்கமும் அளிக்காமல் மௌனம் காத்து வருகிறார். இதனிடையே நேற்றிரவு நெடுஞ்சாலைத்துறையின் அறிவிப்பு பலகையில் பெரியார் ஈ.வெ.ரா. சாலை என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. இந்த ஸ்டிக்கர் அரசு தரப்பில் ஒட்டப்பட்டதா அல்லது ஏதேனும் அமைப்புகள் ஒட்டியதா என சந்தேகம் நிலவியது. இந்த நிலையில், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் பெயர்மாற்றப்பட்ட ஸ்டிக்கரை ஒட்டியது தெரியவந்தது. அரசு உடனடியாக தலையிட்டு ஆவணங்களிலும், பெயர் பலகையிலும் பெயரை மாற்ற வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது. …

The post அரசு கண்டுகொள்ளவில்லை!: சென்னையில் அறிவிப்பு பலகையில் மீண்டும் பெரியார் ஈ.வெ.ரா. சாலை என ஸ்டிக்கர் ஒட்டிய த.பெ.தி.க.வினர்..!! appeared first on Dinakaran.

Tags : Government ,Periyar E. ,Ve. Ra ,Chennai ,T.P.T.K. ,Periyar EVRA ,Periyar ,
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...