×

மேட்டூரில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 20,000 கனஅடி தண்ணீர் திறப்பு

மேட்டூர்: மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியதால் டெல்டா பாசனத்துக்கு 20 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் விநாடிக்கு 24,021 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை நிலவரப்படி 21,946 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.  நீர் திறப்பை காட்டிலும், நீர்வரத்து அதிகரித்ததால், நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதன் மூலம், இந்தாண்டில் 4வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது.


Tags : Opening ,Mettur ,water opening ,Delta ,Delta Irrigation Mettur Dam , Mettur Dam, Delta, water opening
× RELATED மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு