×

விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரன்ட்

சென்னை: உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இடையம்புதூர் சாலையில் கடந்த 2016ல் சாலை விபத்து ஏற்பட்டது. விபத்தில் மண்ணம்மாள் என்பவர் உயிரிழந்தார். இந்த விபத்திற்கான வழக்கு உத்திரமேரூர் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கின் விசாரணை முடிவுறும் நிலையில் புலன் விசாரணை அதிகாரியான அப்போதைய படாளம் இன்ஸ்பெக்டர் சுரேந்திரகுமாருக்கு கடந்த ஆறு மாதமாக சாட்சி விசாரணைக்காக சம்மன் அனுப்பப்பட்டும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இந்நிலையில், இந்த வழக்கு நேற்று நீதிபதி இருதயராணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த 6 மாதமாக விசாரணைக்கு வராத இன்ஸ்பெக்டர் மீது சாட்சி பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். இதேபோல் 2016ம் ஆண்டு மேலும், இரண்டு வழக்குகளிலும் சுரேந்திரகுமார் சாட்சியம் அளிக்காததால் வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது, இன்ஸ்பெக்டர் சுரேந்திரகுமார் திருவள்ளூர் மாவட்டத்தில் பணியாற்றி வருகிறார்.


Tags : hearing ,Inspector , Attendance , trial, Inspector
× RELATED காவலர்கள், அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்குப்பதிவு: அதிகாரிகள் ஆய்வு