×

பாஜ.வுக்கு 2018-19ம் ஆண்டில் ரூ700 கோடி நன்கொடை: டாடா குழுமம் ரூ356 கோடி கொடுத்தது

புதுடெல்லி: கடந்த 2018-19ம் ஆண்டில் டாடா குழுமத்திடம் இருந்து பாஜ ரூ356 கோடி நன்கொடை பெற்றுள்ளது.இந்த ஆண்டில் அதற்கு ரூ700 கோடி நன்கொடை கிடைத்துள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைப்படி அரசியல் கட்சிகள் ஒவ்வொரு நிதியாண்டில் பெற்ற நன்கொடை எவ்வளவு என்ற விவரத்தை வெளியிட வேண்டும். தற்போதைய விதிமுறைப்படி ரூ20,000க்கும் குறைவாக தனி நபரிடம் இருந்தோ அல்லது அமைப்பிடம் இருந்தோ கட்சிகளுக்கு நன்கொடை அளித்தவர்கள் பற்றிய  விவரத்தை ெவளியிட தேவையில்லை. இந்நிலையில், கடந்த 2018-19ம் நிதியாண்டில் பாஜ பெற்ற நன்கொடை விவரம் கடந்த மாதம் 31ம் தேதி தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘இந்த காலகட்டத்தில் பாஜ ரூ700 கோடி அளவுக்கு காசோலைகள் மற்றும் ஆன்லைன் மூலம் நன்கொடை பெற்றுள்ளது. இதில், டாடா அறக்கட்டளையால் ரூ356 கோடி தரப்பட்டுள்ளது. இது தவிர பாரதி ஏர்டெல் குழுமம், ஹீரோ மோட்டார்ஸ், ஓரியன்ட் சிமென்ட், டிஎல்எப் மற்றும் ஜேகே டயர்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய புரூடன்ட் அறக்கட்டளை ரூ54.25 கோடியை கொடுத்துள்ளது. இந்த நன்கொடைகள் காசோலைகளாவும், ஆன்லைன் மூலமாகவும் பெறப்பட்டுள்ளன,’ என கூறப்பட்டுள்ளது. தனிநபர்கள், நிறுவனங்களிடம் இருந்து தேர்தல் பத்திரம் மூலம் பெறப்பட்ட நன்கொடையின் மதிப்பை இந்த அறிக்கையில் பாஜ சேர்க்கவில்லை.

Tags : Tata Group ,group ,Tata ,Baja ,BJP , Baja., Donation, Tata Group
× RELATED 90 பணியிடங்களை நிரப்ப நடப்பாண்டுக்கான...