விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பண்ணை குட்டையில் மூழ்கி 4 வயது சிறுமி உயிரிழந்தார். கம்பூர் கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவரின் மகள் ரித்திகா வீட்டின் அருகே அரசு வெட்டிய பண்ணை குட்டையில் மூழ்கி பலியானாள். சிறுமி ரித்திகாவின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.