×

முகநூலில் சர்ச்சை கருத்து கொடைக்கானல் கூட்டுறவு வங்கியின் தலைவர் கைது

கொடைக்கானல்: முகநூலில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டதாக கொடைக்கானல் அதிமுக கூட்டுறவு வங்கித் தலைவரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அட்டுவம்பட்டியைச் சேர்ந்தவர் விக்ரம்செந்தில். அதிமுகவைச் சேர்ந்த இவர், அட்டுவம்பட்டி பகுதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் தலைவராக உள்ளார். இரு தினங்களுக்கு முன்பு  கொடைக்கானலைச் சேர்ந்த லியோ சாம்ராஜ் என்பவர் முகநூல் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தார். இதற்கு விக்ரம்செந்தில் பதில் பதிவு செய்துள்ளார்.

அதில், ஜாதி, மத உணர்வுகளை தூண்டும் விதமாக கருத்து தெரிவித்திருந்தார். கொடைக்கானலைச் சேர்ந்த ஒரு பிரிவினரை தாக்கியும், குறிப்பிட்ட மதத்தினரை கடுமையாக அவதூறு செய்தும் பதிவிட்டுள்ளார். இதையடுத்து லியோ சாம்ராஜ்  கொடைக்கானல் போலீசில் புகார் செய்தார்.  போலீசார் வழக்குப்பதிந்து விக்ரம் செந்திலை நேற்று கைது செய்தனர்.



Tags : Kodaikanal Co-operative Bank ,Head , Controversy , Facebook, Kodaikanal ,Co-operative ,Bank arrested
× RELATED ரங்கோலி வரைந்து விழிப்புணர்வு பிரசாரம்