×

ஆளுமை வெற்றிடம் உள்ளது: முன்னாள் மத்திய அமைச்சர் பேட்டி

சென்னை: சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் சவுதி அரேபியா ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளர் கோவி.சந்துரு தலைமையில் அதிமுக. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர்  முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜவில் இணைந்தனர்.தொடர்ந்து  பொன்.ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி:நடிகர் ரஜினிகாந்த் கூறியதை போன்று தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றிடம் இருப்பதை யாராலும் மறுக்க முடியாது. ஏனென்றால் கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய மக்கள் செல்வாக்கு பெற்ற மிகப்பெரிய 2 ஆளுமைகள் இப்போது நம்மிடம்  இல்லை. அவர்களுக்கு நிகரான தலைவர்கள் இல்லை என்பது நிதர்சனமான உண்மை தான். அயோத்தி விவகாரத்தில் அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய உச்சம் தொட்ட தீர்ப்பு வெளியாகியிருக்கிறது. இந்த தீர்ப்பை திமுக உள்ளிட்ட  கட்சிகள் வரவேற்றுள்ளன. சில கருத்துக்களை சொல்லியிருக்கிறார். உள்ளாட்சி தேர்தலில் பாஜ மிகப்பெரிய வெற்றிபெறும். உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை வேகப்படுத்தியிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Union Minister , Personality ,vacuum, former Union, Minister
× RELATED சொத்து விவரங்கள் மறைத்த ஒன்றிய...