×

செல்போன் பறித்த சிறுவன் கைது

சென்னை: தேனாம்பேட்டையில் நேற்று முன்தினம் இரவு கேதார்நாத் (28) என்பவர், சாலையில் நடந்து ெசன்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த 2 பேர், திடீரென கேதார்நாத்தை வழிமறித்து சராரியாக தாக்கி, அவரிடம் இருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்து கொண்டு தப்பினர். இதுகுறித்து கேதார்நாத் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து, சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினர்.

அதில், திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த 17 வயதுக்கு உட்பட்ட சிறுவன் ஒருவரும் மற்றும் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த பழைய குற்றவாளி முனிர்பாஷா (21) ஆகியோர், செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீசார், அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

Tags : Cell phone, boy arrested
× RELATED பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி வேட்பாளர்...