புதுடெல்லி: இஸ்லாமிய மக்களுக்கு பிரதமர் மோடி மிலாது நபி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். முகமது நபிகளின் பிறந்த நாளான நேற்று இஸ்லாமிய மக்கள் மிலாது நபி திருநாளாக ெகாண்டாடி மகிழ்ந்தனர். இதனை முன்னிட்டு பிரதமர் மோடி இஸ்லாமிய மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது டிவிட்டரில், ‘மிலாது நபி வாழ்த்துக்கள். நபிகள் நாயகத்தின் எண்ணங்களான நல்லிணக்கம், சமுதாயத்தில் இரக்க உணர்வு அதிகரிக்கட்டும். சமுதாயத்தில் அனைத்து இடங்களிலும் அமைதி நிலவட்டும்,’ என்று பதிவிட்டுள்ளார்.