×

வைகையாற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழையினால் வைகை அணையில் நீர்திறப்பு அதிகரிப்பு: போக்குவரத்தில் மாற்றம்

மதுரை: வைகையாற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாகவும் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதாலும் மதுரை வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மதுரை நகரின் யானைக்கல் கீழ்ப்பாலம், ஒபுளா படித்துறை கீழ்ப்பாலம் ஆகியவை வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கின் காரணமாக பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

Tags : rainfall ,catchment areas ,river ,Vaigai ,shift ,Vaigai Dam , Vaigai, water catchment, heavy rain, Vaigai dam
× RELATED ஸ்ரீநகர் பகுதியில் ஜீலம் ஆற்றில்...