ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் நீர் திறக்கப்படுவதால் கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கான நீர்திறப்பு 750 கன அடியிலிருந்து 600 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.