×

ஒரு அசம்பாவிதம் கூட இல்லை நாடு முழுவதும் அமைதி

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாகும் முன்பிருந்தே, உபி மாநிலம் மீதுதான் உலக மக்களின் கண்கள் இருந்தன. அங்கு கலவரம் வெடிக்குமோ என அச்சம் எழுந்தது. ஆனால், உபி மட்டுமின்றி நாடு முழுவதும், இந்த தீர்ப்பின் காரணமாக ஒரு சிறு அசம்பாவிதங்கள் கூட நடக்கவில்லை. தீர்ப்பை முன்னிட்டு உபி மட்டுமின்றி, நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததே இதற்கு முக்கிய காரணம். மேலும், எல்லா தரப்பு மக்களும் கட்டுப்பாடுடன் இருந்தனர்.

உபி.யில் செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்:
* அயோத்தி வழக்கில் தீர்ப்பை முன்னிட்டு அசம்பாவிதங்கள் நடந்தால் சமாளிப்பதற்காக, மாநிலம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் தற்காலிக சிறைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டு இருந்தது.
* சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவுவதை தடுக்க, பல்வேறு இடங்களில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது.
* 4000 மத்திய துணை ராணுவப்படை வீரர்களும், பல ஆயிரம் போலீசார் பாதுகாப்பு  பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
* மாநிலம் முழுவதும் 31 மாவட்டங்கள் பதற்றமிக்கதாக அறியப்பட்டு, 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

Tags : country , An impasse, not even, nationwide, peace
× RELATED ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமே…18,626...