×

இரண்டாம் கட்டமாக பார்மசிஸ்ட், பகுப்பாய்வாளர் பதவிக்கு சான்று சரிபார்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை:தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட அறிவிப்பு: கடந்த ஜூன் மாதம் 23, 24 ஆகிய தேதிகளில் மருந்தாய்வாளர், இளநிலை பகுப்பாய்வாளர் பதவிகளுக்கான தேர்வுகள் நடைபெற்றது. இதில் இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 102 பேரின் பட்டியல் மற்றும் சமூகவியலாளர் மற்றும் பொருளியலாளர் பதவிக்களுக்கான முதற்கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ள 6 பேரின் பட்டியலானது தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பதவிகளுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர் தங்களது மூலச் சான்றிதழ்களை சான்றிதழ் சரிபார்ப்பிற்காக வருகிற 11ம் தேதி(நாளை) முதல் 15ம் தேதி வரை மாலை 5.30 மணிக்கு முன்னர் ஸ்கேன் செய்து தேர்வாணைய இணைய தளத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பதாரர் சான்றிதழ்களை மேற்குறிப்பிட்ட நாளுக்குள் பதிவேற்றம் செய்யவில்லை எனில் அவ்விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ள விருப்பமில்லை எனக் கருதி அவர்களது விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags : Phase II Pharmacist ,Analyst ,DNBSC Announcement ,Phase Pharmacist ,DNPSC Announces , Pache E, Pharmacist, Analyst PositiveOne, CertificateCode Verification, TunSq, Announcement
× RELATED தஞ்சாவூர் அருகே வடுகக்குடி வாழை...