×

பாம்புகள் குடியிருப்பதால் பயந்து நடுங்கும் ஆயுதப்படை

நாகர்கோவில் மறவன் குடியிருப்பு பகுதியில் ஆயுதப்படை மைதானம் உள்ளது. இங்கு காவல்துறையினருக்கு புதிய குடியிருப்புகள் கட்டிய பின் இன்னும் பழைய வீடுகள் இடிக்கப்படாமல் அப்படியே உள்ளன. இது குறித்து பலமுறை ஆயுதப்படை நிர்வாகத்திலிருந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூலம் அரசுக்கு நினைவூட்டும் கடிதங்கள் அனுப்பியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இந்த கட்டிடங்கள் தற்போது பாழடைந்து வீணாகி வருகிறது.

இந்தக் கட்டிடங்களில் பாம்புகளும் பல்வேறு விதமான பூச்சிகளும் குடியிருந்து அங்கு இருக்கக்கூடிய மற்ற வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் போலீசார் மட்டுமல்ல, அவரது குடும்பத்தாரும் நிம்மதியாக உறங்க முடியாத நிலை உள்ளது. எனவே பழைய கட்டடங்களை அரசு முறைப்படி டெண்டர் விட்டு புதிய வீடுகள் அமைத்து வெளியே அதிக வாடகை கொடுத்து குடியிருக்கும் போலீசாருக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : forces , Snakes are resident, terrified, armed
× RELATED கோடை விடுமுறையை குறிவைத்து ரயில்...