×

கஞ்சா விற்ற பெண் உள்பட 3 பேர் கைது

சென்னை: செங்குன்றம் பஸ் நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு கஞ்சா விற்ற செங்குன்றம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (20), விஜி (20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், வியாசர்பாடியை சேர்ந்த பிரபல ரவுடி  இட்டா என்ற அஜித்குமாரின் மனைவி ரம்யா (23) என்பவர், இவர்களிடம் கஞ்சா பொட்டலங்களை கொடுத்து விற்பனை செய்ய வைத்தது தெரியவந்தது. இதையடுத்து, மாதவரம் பால் பண்ணை தாமரை தெருவில் உள்ள வீட்டில் பதுங்கியிருந்த  ரம்யாவை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மூவரிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

* பழைய பல்லாவரத்தில் உள்ள பொன்னியம்மன் கோயிலை நேற்று காலை பூசாரி திறக்க வந்தபோது, உண்டியல் பெயர்த்து எடுக்கப்பட்டு, சில்லறை காசுகள் சிதறி கிடந்தது. கடந்த மாதம் உண்டியல் பணத்தை நிர்வாகத்தினர் எடுத்ததால்,  அதில் பெரிய அளவில் பணம் இல்லை. இதனால், விரக்தியடைந்த கொள்ளையர்கள், உண்டியலை உடைத்து வீசிவிட்டு சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பல்லாவரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

* புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்த ஹேமலதா (25) என்பவரின் வீட்டில் நுழைந்து 6 சவரன் நகை மற்றும் அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன் (49) என்பவரது வீட்டில் இருந்து விலையுயர்ந்த 2 செல்போன்களை திருடிய வழக்கில்,  கடந்த 29ம் தேதி வினோத்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கன்னிகாபுரத்தை சேர்ந்த சதிஷ் (26) என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 6 சவரன் நகை மற்றும் 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.




Tags : Three arrested, selling, cannabis
× RELATED தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில்...