×

கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் பயணம்: தமிழக அரசு நிதிஉதவி

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ்நாட்டை சேர்ந்த அனைத்து பிரிவினர்களையும் உள்ளடக்கிய 600 கிறிஸ்தவர்கள் (இவற்றில் 50 கன்னியாஸ்திரிகள் / அருட் சகோதரிகள்) 2019-20ம் ஆண்டில் ஜெருசலேம் புனிதபயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசால் நபர் ஒருவருக்கு  ரூ.20,000 நிதி உதவி வழங்கப்படுகிறது. விண்ணப்பங்கள் 30.11.2019 வரை வரவேற்கப்படுகின்றன.  

இதற்கான விண்ணப்பப்படிவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல  அலுவலகத்தில் இருந்து கட்டணமின்றி பெறலாம். தவிர இணையதளம் மூலம் www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரியில் படியிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம். மேற்படி திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் கிறிஸ்தவர்கள்  30.11.2019-குள் இயக்குநர், சிறுபான்மையினர் நல இயக்ககம், கலசமஹால், சேப்பாக்கம், சென்னை-5 என்ற முகவரிக்கு விண்ணப்பித்து பயன் பெறலாம்.

Tags : Christians ,Jerusalem Christians ,Jerusalem , Christians, travel , Jerusalem
× RELATED ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம் தேவாலயங்களில் சிறப்பு ஆராதனைகள்