×

மகாராஷ்டிராவில் திடீர் திருப்பம்: ஆட்சியமைக்க பட்னாவிஸ்க்கு ஆளுநர் பகத்சிங் அழைப்பு...பெரும்பான்மையை நிரூபிக்க நவ.11 வரை கெடு

மும்பை: மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜனதா 105, சிவசேனா 56, தேசியவாத காங்கிரஸ் 54, காங்கிரஸ் 44 இடங்களில்  வெற்றி பெற்றன. தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பா.ஜனதா-சிவசேனாவுக்கு ஆட்சியமைப்பதற்கு தேவையான  பெரும்பான்மை பலம் உள்ளது. ஆனால், இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்வர் பதவி, அமைச்சரவையில் சரிபாதி பிரதிநிதித்துவம்  ஆகிய கோரிக்கைகளை சிவசேனா பிடிவாதமாக வலியுறுத்தி வருவதை பா.ஜனதா ஏற்க மறுத்து வருவதால், தேர்தல் முடிவு  வெளியாகி 2 வாரங்களுக்கு மேலாகியும் புதிய அரசு பதவியேற்பதில் சிக்கல் நீடித்தது.

தனிப்பெரும் கட்சியாக இருந்த போதிலும் ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோராமல் பா.ஜனதா மவுனம் சாதிக்கிறது. 5 ஆண்டு  பதவிக்காலம் முடிந்து விட்டதால் நேற்று ஆளுநரை சந்தித்து முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.  பின்னர், பட்நவிஸ் அளித்த பேட்டியில், மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை காபந்து முதல்வராக நீடிக்குமாறு ஆளுநர் என்னிடம்  கேட்டுக் கொண்டார். விரைவில் பாஜ - சிவசேனா கூட்டணி உறுதியானால், புதிய அரசு பதவியேற்கலாம்; இல்லையேல், ஜனாதிபதி  ஆட்சி அமலாகலாம் என்றார்.

இந்நிலையில், மகாராஷ்டிரா ஆட்சியமைக்க மாநில முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்க்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்துள்ளார். மேலும், நவம்பர் 11-ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் பட்னாவிஸ்க்கு கெடு விதித்துள்ளார்.  மகாராஷ்ரா சட்டப்பேரவையில், பெரும்பான்மையை நிரூபிக்க 145 உறுப்பினர்கள் தேவைப்படும் நிலையில், பாஜகவிடம் 105 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். இதனால் தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராக பொறுப்பெற்றுக்கொண்டாள். மகாராஷ்டிராவில் எம்எல்ஏ-க்கள் பேரம் சுடுபிடிக்கும் என்று கூறப்படுகிறது.

Tags : Bhagat Singh ,Maharashtra ,Patnaisk , Maharashtra's sudden turn: Governor Bhagat Singh's call to rule Patnavis ...
× RELATED பேருந்தும், லாரியும் மோதி விபத்து: 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!