×

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் : சன்னி வக்பு வாரியம்

புதுடெல்லி: அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறோம்; ஆனால் திருப்தி இல்லை என்று அனைத்திந்திய இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியத்தின் வழக்கறிஞர் ஜிலானி தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று சன்னி வக்பு வாரியம் அறிவித்துள்ளது. தீர்ப்புக்கு எதிராக எங்கும் எந்த போராட்டமும் நடத்த கூடாது வழக்கறிஞர் ஜிலானி வலியுறுத்தியுள்ளார்.

புதுடெல்லி: நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி நில வழக்கில் உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது. அதன்படி அயோத்தியில் இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்று தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டுள்ளது.

மேலும் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் இந்து அமைப்புகளுக்கே என்று பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ராமர் கோயில் கட்டுவதற்கு அறக்கட்டளை ஒன்றை 3 மாதத்தில் உருவாக்க மத்திய அரசுக்கு அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டுள்ளது. அறக்கட்டளை மேற்பார்வையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி நடைபெற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Supreme Court ,Ayodhya ,Sunny Wakpu Board ,Gilani ,Islamic Organization , Ayodhya case, Supreme Court decision, Islamic Organization, Sunny Wakpu Board, adjournment petition, lawyer Gilani
× RELATED யோகா மாஸ்டர் ராம்தேவ் சிறிய அளவில்...