ஈரோடு: ஈரோடு பவானிசாகர் அணையின் முழு கொள்ளளவான 105 அடியில் 104.90 அடியை நீர்மட்டம் எட்டியது. நள்ளிரவுக்குள் முழு கொள்ளளவை எட்டும் என்பதால் அணையில் இருந்து 3,600 கன அடி நீர் திறக்க வாய்ப்புள்ளது. உபரி நீர் திறக்கப்படவுள்ளதால் பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் மேடான பகுதிக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.