×

காற்றாடி பறக்க விட்டாலும் விற்பனை செய்தாலும் சிறை தண்டனை: துணை ஆணையர் எச்சரிக்கை

சென்னை: காற்றாடி பறக்க விட்டாலும் விற்பனை செய்தாலும் சிறை தண்டனை என சென்னை வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். காற்றாடி பறக்க விடாமல் பிள்ளைகளை கண்காணித்து பாதுகாக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். சென்னை கொருக்குப்பேட்டையில் மாஞ்சா நூல் அறுத்து 3 வயது சிறுவன் உயிரிழந்ததை அடுத்து போலீஸ் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கொருக்குப்பேட்டை குடியிருப்பில் துணை ஆணையர் சுப்புலட்சுமி பொதுமக்களுக்கும் வியாபாரிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Tags : selling ,Deputy Commissioner , Windmill, Deputy Commissioner
× RELATED சென்னை திருமங்கலம் பகுதியில் தடை...