×

சிலைகடத்தல் வழக்கில் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்ற உத்தரவுகள் மீறப்பட்டால் அதற்கு டி.ஜி.பியே பொறுப்பு: ஐகோர்ட் எச்சரிக்கை

சென்னை: சிலைக்கடத்தல் வழக்கில் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகள் மீறப்பட்டால் அதற்கு டிஜிபியே பொறுப்பு என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவேலு அமர்வு தமிழக காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. சிலைகடத்தல் வழக்கு விசாரணையில் தலையிட்டதாக கூறப்படும் இரண்டு அமைச்சர்களின் பெயரை வெளியிட கோரி மனு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.  யானை ராஜேந்திரன் என்பவர் கோரிக்கை மனு தாக்கல் செய்தார். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் நடத்தி வரும் விசாரணையில் 2 அமைச்சர்கள் தலையிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து பொன். மாணிக்கவேல் குற்றம் சாட்டியுள்ள 2 அமைச்சர்கள் பெயரை வெளியிட யானை ராஜேந்திரன் என்பவர் கோரிக்கைவிடுத்தார். சிலை கடத்தல் வழக்குகளில் ஏற்கனவே உயர்நீதிமன்றம் அதிரடியான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. ஆனால் அந்த உத்தரவுகளை முறையாக தமிழக அரசு நிறைவேற்றவில்லை என்று சிலைகடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவேலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அச்சமயம் அரசு தரப்பில் ஆஜரான உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பாலாஜி ஸ்ரீனிவாசன் இந்த வழக்கில் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறி அதற்கான அரசாணை தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளில் கூடுதல் டிஜிபி ஒருவர் தலையிடுவதாகவும் சிலை கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்க அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவதாகவும் பொன் மாணிக்கவேல் தரப்பு வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இதற்கு நீதிபதிகள், சிலை பாதுகாப்பு மற்றும் பொன்.மாணிக்கவேலுக்கான வசதிகள் தொடர்பான தீர்ப்புகள் மீறப்பட்டால் டிஜிபியே பொறுப்பு என கருத்து தெரிவித்தனர். தமிழகத்தின் பொக்கிஷங்களான சிலைகளை பாதுகாக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் உயர்நீதிமன்றம் செயல்படுகிறது. அரசு அதிகாரிகள், அரசுக்கு எதிராகவோ, ஆதரவாகவோ  செயல்பட வேண்டும் என்கிற எண்ணம் உயர்நீதிமன்றத்திற்கு இல்லை என்று கூறி பொன்.மாணிக்கவேல் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நவ.12க்கு ஒத்திவைத்தனர்.

Tags : DGP ,Supreme Court , Idolization, High Court, Supreme Court, Order, DGP, Responsibility, Icort Warning
× RELATED அண்ணாமலை மீது கிரிமினல் வழக்கு...