சென்னை : தமிழகத்தில் பிரிபெய்டு மின் மீட்டர் பொருத்தி மின் கட்டணம் நிர்ணயிக்கும் முறை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது, இத்திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், மழைக்காலம் என்பதால் மின்சாரம் வழங்குவதில் பாதிப்பு ஏற்பட்டால் உடனே சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள மின்சார வாரியம் தயார் நிலையில் உள்ளதாகவும் ஒரு மாதத்திற்குள் கேங் மேன் பணியிடங்கள் நிரப்பப்பட்டு விடும் என்றும் அவர் கூறினார்.