×

பைனான்ஸ் அதிபர் வீட்டில் 120 சவரன், 30 லட்சம் கொள்ளை முக்கிய குற்றவாளி கைது

* 30 சவரன் மட்டுமே திருடியதாக வாக்குமூலம்
* விசாரணை நடத்திய போலீசார் குழப்பம்

சென்னை: பல்லாவரம் அடுத்த பம்மல், தொல்காப்பியர் தெருவை சேர்ந்தவர் ஜெயசீலன் இம்மானுவேல் (41). இவர் தனது வீட்டின் அருகே பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். மேலும் தமிழக வணிகர் சங்கத்தில் மாநில துணைத் தலைவராக உள்ளார். இவரிடம் நிறைய பணம் புழங்குவதை அறிந்த மர்ம நபர் ஒருவர், கடந்த செப்டம்பர் 8ம் தேதி, ஜெயசீலன் குடும்பத்தினர் சர்ச்சுக்கு சென்ற நேரத்தில், அவரது வீட்டின் கதவை உடைத்து, பீரோவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 120 சவரன் தங்க நகைகள் மற்றும் 30 லட்சம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்து சென்றார்.  

இந்நிலையில் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, கொள்ளையன் உருவம் தெளிவாக பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த கொள்ளையன் ஜான் போஸ்கோ வை (34) சென்னை மவுண்ட் ரோட்டில் உள்ள அவரது மாமியார் வீட்டில் வைத்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து கொள்ளையடித்த நகைகள் சுமார் 30 சவரனை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில், தான் 30 சவரன் மட்டுமே கொள்ளையடித்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதனால் போலீசார் குழப்பம் அடைந்தனர்.

Tags : robbery ,home ,Accounting Chancellor , 120 shaving, 30 lakh robbery arrested
× RELATED வாக்களிக்க வந்தபோது ‘இந்திய நாடு என் வீடு’- பாடலை பாடினார் நடிகர் வடிவேலு