×

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் வரும் 10-ம் தேதி செயற்குழு கூட்டம்: கட்சி தலைமை அறிவிப்பு

டெல்லி: டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நவம்பர் 10-ம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் செயற்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18-ஆம் தேதி நடைபெறுகிறது என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தின் இருஅவை செயலர்களுக்கும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சகம் அறிக்கை அனுப்பியுள்ளது. இதில் பொருளாதார மந்த நிலையை சரிசெய்வதற்காக, கடந்த 1961-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வருமான வரி சட்டத்தில் திருத்தம் செய்து  மத்திய அரசு கடந்த மாதம்  அவசர சட்டம் இயற்றியது.

அதன்படி, பெருநிறுவனங்களுக்கான வரி குறைக்கப்பட்டது. மேலும், அதே மாதத்தில் இ-சிகரெட்டுகள் உள்ளிட்டவை விற்பனை மற்றும் சேமிப்புக்கு தடை விதித்து அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த இரு அவசர சட்டங்களுக்கும் குளிர்கால கூட்டத்தொடரில் ஒப்புதல் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், குளிர்கால கூட்டத்தொடரில் பொருளாதார மந்தநிலை, பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம், வேளாண் பொருட்களுக்கு குறைவான விலை, வேலை வாய்ப்பின்மை போன்ற விவகாரங்களை எழுப்பி பொது போராட்டத்தில் ஈடுபடுவது என எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

இவற்றில் பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் என்பது ஆசியான் அமைப்பின் 10 உறுப்பு நாடுகள் மற்றும் இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 6 நாடுகள் என மொத்தம் 16 நாடுகள் இடையே தடையில்லா வர்த்தகத்தை மேற்கொள்ளும் வகையிலான ஒப்பந்தம் ஆகும். எனினும் இதில் சேர இந்தியா மறுப்பு தெரிவித்து உள்ளது. காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்காவின் செல்போனில் ‘வாட்ஸ்-அப்’ செயலிக்குள் சட்ட விரோதமாக புகுந்து உளவு பார்த்துள்ளனர் என்றும் ஒட்டுக்கேட்டுள்ளனர் என்றும் அக்கட்சியின் மூத்த தலைவர் ரன்தீப் சுர்ஜிவாலே டெல்லியில் செய்தியாளர்களிடம் கடந்த சில நாட்களுக்கு முன் கூறினார்.  

இந்த விவகாரம் பற்றி எதிர்க்கட்சிகள் ஆலோசனை மேற்கொள்வோம் என்றும், வருங்காலத்தில் மேற்கொள்ள உள்ள நடவடிக்கைகள் பற்றி முடிவு செய்யப்படும் என்றும் அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறினார். இந்நிலையில், காங்கிரஸ் செயற்குழு கூட்டம் டெல்லியில் வருகிற 10ந்தேதி நடைபெறுகிறது.  டெல்லியில் நடைபெறும் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் குளிர்கால கூட்ட தொடர், பிரியங்கா வாட்ஸ்அப் செயலி வழியே உளவு வேலையில் ஈடுபட்ட விவகாரம் உள்ளிட்டவற்றில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Sonia Gandhi ,Congress ,chair party meeting , Congress, Sonia Gandhi, Executive Committee Meeting
× RELATED மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார் சோனியா காந்தி..!!