×

தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாளர்களை ஆட்குறைப்பு செய்யக் கூடாது: முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை: தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாளர்களை ஆட்குறைப்பு செய்யக் கூடாது என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றும் பணியாளர்களை ஆள் குறைக்கும் நடவடிக்கையில் தனியார் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதனால் ஐ.டி. நிறுவனமாக தகவல் தொழில்நுட்ப துறையில் ஏற்பட்டுள்ளதாக பல்வேறு துறை சார்ந்தவர்கள் தெரிவித்தார்கள். இந்நிலையில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் தகவல் தொழிநுட்ப துறை சார்பாக நடத்தப்படும் இந்த இரண்டு நாள் கருத்தரந்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். தகவல் தொடர்பாக பல்வேறு தனியார் நிறுவனங்கள் இந்த கருத்தரங்கில் பங்கேற்றுள்ளன.

அந்த நிறுவனத்தின் உரிமையார்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் மத்தியில் முதல்வர் பழனிசாமி பேசினார். அப்போது தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாளர்களை ஆட்குறைப்பு செய்யக் கூடாது. கடந்த 1 மாதத்திற்கும் மேலாக தகவல் தொழில் நுட்ப துறையில் ஆள்குறைப்பு நடவடிக்கையில் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இது முற்றிலுமாக தடுக்க வேண்டும். அவ்வாறு ஆள்குறைப்பு நடவடிக்கையை எவ்வாறு குறைக்க வேண்டும் என்பது குறித்து இந்த கருத்தரங்கில் விவாதிக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் அவர்கள் வலியுறுத்தியுள்ளார். மேலும் பேசிய அவர்; 6 லட்சம் வேலைவாய்ப்புகளை தகவல் தொழிநுட்பத் துறையில் உருவாக்கியுள்ளோம்.

தமிழகத்தில் 60 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு தமிழகத்திற்கு ரூ.6 ஆயிரத்து 500 கோடி முதலீடு கிடைத்துள்ளது. மாநில தகவல் குடும்ப தொகுப்பு உருவாக்கப்படும். கிராமபுற மக்களுக்கு இணையதள வசதி திட்டம் விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசு அலுவலகங்களுக்கு மக்கள் வராமல் மக்களைத் தேடி அரசு செல்லும் கனவு நிறைவேறுகிறது எனவும் கூறியுள்ளார். இதனிடையே  காக்னிசென்ட், இன்போசிஸ் உள்ளிட்ட ஐடி நிறுவனங்களில் பெரிய அளவில் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Palanisamy ,
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...