சத்தீஸ்கர்: பிஜாப்பூரில் மாவோயிஸ்ட்டுகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் சி.ஆர்.பி.எப். வீரர் வீரமரணம் அடைந்துள்ளார். சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஆந்திரா, காஷ்மீர், ஒடிசா ஆகிய மாநிலங்கள் நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாக விளங்கி வருகிறது. ஆதலால் இங்கு அடிக்கடி போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். நக்சலைட்டுகளை ஒடுக்குவது குறித்து அம்மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த வருடம் இறுதியில் நடந்த சட்டசபை தேர்தலில் ஓட்டு பதிவை புறக்கணிக்கும்படி கூறி, போஸ்டர்களை ஒட்டியும், பொதுமக்களுக்கு மிரட்டல் விடுத்தும் பரபரப்பினை ஏற்படுத்தினர்.
எனினும், தேர்தல் முடிந்து காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் சட்டீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் நகரில் நக்சலைட்டுகள் பதுங்கி உள்ளனர் என மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு (சி.ஆர்.பி.எப்.) தகவல் கிடைத்தது. தகவலை அடுத்து வீரர்கள் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பிஜாப்பூரில் மாவோயிஸ்ட்டுகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் சி.ஆர்.பி.எப். வீரர் வீரமரணம் அடைந்துள்ளார். தொடர்ந்து சி.ஆர்.பி.எப். வீரர்கள் பதுங்கிய மாவோயிஸ்ட்டுகளை தேடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.