×

துளித் துளியாய்

* ‘மஹா’ புயல் அச்சுறுத்தல் உள்ளதால் ராஜ்கோட்டில் 2வது டி20 போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
* டெல்லியில் நடந்த முதல் டி20 போட்டியின்போது 2 வங்கதேச வீரர்கள் காற்று மாசுவால் பாதிக்கப்பட்டு வாந்தி எடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
* ஐபிஎல் தொடருக்கான தொடக்க விழாவை வீண் செலவு என்று குறிப்பிட்டுள்ள பிசிசிஐ, எதிர்வரும் சீசனில் இருந்து இதைக் கைவிட முடிவு செய்துள்ளது.
* கடந்த சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடிய ஆர்.அஷ்வின், டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு மாற உள்ளார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
* பாகிஸ்தான் அணியுடன் நடக்க உள்ள டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில், பெர்த் மைதானத்தில் நாளை நடக்க உள்ள 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில் ஆஸி. முன்னணி வேகம் பேட் கம்மின்சுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
* லக்னோவில் ஆப்கானிஸ்தான் அணியுடன் நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில், டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசியது. ஆப்கானிஸ்தான் 45.2 ஓவரில் 194 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ரகமத் ஷா 61 ரன், இக்ராம் அலிகில் 58, அஸ்கர் ஆப்கன் 35, குல்பாதின் 17 ரன் எடுத்தனர்.


Tags : All Sports
× RELATED நடப்பு ஐபிஎல் தொடரின் சில போட்டிகளில்...