×

திருவள்ளுவர் விவகாரம் தமிழகம் முழுவதும் 11ம் தேதி ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் அறிவிப்பு

சென்னை: திருவள்ளுவருக்கு காவி உடை உடுத்தி அவமதிப்பு செய்ததை கண்டித்து, தமிழகம் முழுவதும் வரும் 11ம்தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.  விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:   திருவள்ளுவரை முன்னிறுத்தி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் சங்பரிவார் கும்பலைக் கண்டிக்கும் வகையிலும், சாதி மத வெறுப்பு அரசியலிலிருந்து தமிழகத்தைக் காக்கும் நோக்கிலும் வரும் நவம்பர் 11ம்தேதி தமிழகம் தழுவிய  அளவில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : issue protests ,Thiruvalluvar ,Tamil Nadu ,protests ,11th Thiruvalluvar , Thiruvalluvar , Tamil Nadu, 11th
× RELATED திருக்குறளில் வேள்வி!