×

பெண் தொழிலாளியுடன் கள்ளத்தொடர்பு தொழிலதிபரை கொன்று உடலை எரித்த மனைவி, மகன் கைது

க.பரமத்தி: பெண் தொழிலாளியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால் தனியார் நிறுவன உரிமையாளரை கழுத்தை நெரித்து கொலை செய்து, உடலை காரில் வைத்து எரித்த மனைவி, மகனை போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே முன்னூர் ஊராட்சிக்குட்பட்ட வேலம்பாளையம் பகுதியில் தீப்பற்றி எரிந்த நிலையில் காருடன் ஆண் சடலம் இருப்பதாக அந்த வழியாக வந்தவர்கள் க.பரமத்தி போலீசார், கிராம நிர்வாக அலுவலர்  ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் எஸ்பி பாண்டியராஜன், ஏடிஎஸ்பி பாஸ்கர், டிஎஸ்பி கல்யாணசுந்தரம், க.பரமத்தி   இன்ஸ்பெக்டர் ரமாதேவி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு காரின் பின் சீட்டில்  ஒருவர் கருகிய  நிலையில் இறந்து கிடந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என போலீசார் விசாரணை நடத்தினர்.  காரின் பதிவு எண்ணை கொண்டு விசாரித்தபோது, அவர் கரூர் நொய்யல் குறுக்குசாலை ரயில்வே கேட் பகுதியில் வசித்து வந்த மணி (எ) ரங்கசாமி (48) என்பதும், பாக்குதட்டு தயாரிப்பு நிறுவனம் நடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் நொய்யலுக்கு சென்று ரங்கசாமியின் மனைவி கவிதா(39), மகன் அஸ்வின்(19) ஆகியோரிடம் நடத்திய விசாரணையில், ரங்கசாமிக்கு குடிப்பழக்கமும், அதே நிறுவனத்தில் கூலி தொழிலாளியான ஒரு பெண்ணுடன் கள்ள  உறவும் இருந்துள்ளது. இதுதொடர்பாக கடந்த இரு நாட்களாகவே கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இரவு நடந்த வாய் தகராறில் ரங்கசாமி, மனைவி மற்றும் மகனை  தாக்கியதால் ஆத்திரமடைந்த மகன் தந்தையை கழுத்தை  நெரித்துள்ளார். இதில் அவர் இறந்த போனதும் காரில் பின் சீட்டில் படுக்க வைத்து எரிப்பதற்காக இடம் தேடி தாயும், மகனும் சென்றுள்ளனர். வேலம்பாளையம் அருகே வந்ததும் காரின் பின்புறம் பள்ளத்தில் இறங்கி விட்டது. மேலே காரை எடுக்க முயன்றும் முடியவில்லை. உடனே கொண்டு வந்த டீசலை எடுத்து காரின் மீதும், சடலத்தின் மீதும் ஊற்றி தீப்பற்ற வைத்து விட்டு தப்பி சென்றது தெரிய வந்தது.இது குறித்து க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : body businessman ,businessman , Counterfeiting,female worker, murdering, businessman ,
× RELATED அதிமுக நிர்வாகி மீது தொழிலதிபர் புகார்