×

தக்கலை அருகே வீட்டில் கூடு கட்டி குடியிருந்த ஆஸ்திரேலிய ஆந்தை

தக்கலை: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே கொக்கோடு பகுதியை சேர்ந்தவர் வைகுண்டராம். இவரது வீட்டில் ஆந்தை கூடு கட்டி இருந்ததை கண்டுபிடித்தார். அதை பார்த்தபோது அதில் 6 ஆந்தைகள் இருந்தன. இன்று வைகுண்டராம் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து அந்த ஆந்தைகளை பிடித்து உதயகிரி கோட்டையில் உள்ள வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

அதிகாரிகள் ஆய்வு செய்தபோது அந்த ஆந்தை ஆஸ்திரேலியாவை சேர்ந்த அரிய வகை ஆந்தை என தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த ஆந்தைகளை கூண்டில் அடைத்து சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக வைத்துள்ளனர்.


Tags : Australian ,Takalai ,resident , Takalai, house-nesting, resident, Australian owl
× RELATED மோடி அரசு தரும் நெருக்கடி:...